பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பிரித்தானியாவில் தொடர்ந்து 43 நாட்களாக உயர்ந்திருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தற்போது
எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லையென வாகன அமைப்பான RAC தெரிவித்துள்ளது.

வளைகுடா பகுதியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதுடன்,
மொத்த சந்தைகளிலும் எரிபொருள் விலைகள் சரிவடைந்துள்ளன.

ஆனால், முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடும்போது விலைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. பெட்ரோல் லீற்றருக்கு சுமார் 158 பென்ஸ் அளவில் விற்பனையாகிறது. டீசல் விலை லீற்றருக்கு சுமார் 192 பென்ஸ் வரை உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அடுத்த வாரங்களில் எரிபொருள் விலைகள் மேலும் குறையலாம் என்றும் RAC தெரிவித்துள்ளது.

இதனிடையே, எரிபொருள் விலை நிர்ணயத்தில் “ராக்கெட் மற்றும் இறகு” என்ற முறையில் விலை விரைவாக உயர்ந்து, மெதுவாக குறைகிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போட்டி மற்றும் சந்தைகள் ஆணையம்தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இவ்வாறாக, விலை குறையும் எதிர்பார்ப்பு இருந்தாலும், தற்போதைக்கு மக்கள் உயர்ந்த எரிபொருள் விலையையே எதிர்கொண்டு வருகின்றனர்.