மாமியார் விதித்த நிபந்தனை – நடிகர் ரவி மோகன் பதில்

மனைவியைப் பிரிந்து வாழும் நடிகர் ரவி மோகன் குழந்தைகளைச் சந்திக்க நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், “குழந்தைகளை ரவி மோகன் பொது இடத்தில்தான் சந்திக்க வேண்டும்” என மாமியார் சுஜாதா நிபந்தனை விதித்திருந்தார். இதற்குப் பதிலளித்த ரவி மோகன், “நீதிமன்ற உத்தரவை சிலர் அவமதிப்பது வருத்தமளிக்கிறது. நான் உயிருடன் இருக்கும் வரை நாங்கள் நால்வரும் ஒரே அறையில் சேர்வது நடக்காது” என வேதனையுடன் கூறியுள்ளார்.