முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 20ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட மார்கண்டேயன், தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறையில் அவரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், வழக்கு தொடர்பாகவும், தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
